Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொச்சி விமான நிலையத்தில் ரூ.38 லட்சம் தங்கம் பறிமுதல்

நவம்பர் 19, 2022 11:48

திருவனந்தபுரம்: வளைகுடா நாடுகளில் இருந்து கேரளாவுக்கு அடிக்கடி தங்கம் கடத்தி வரும் சம்பவங்கள் நடந்து வந்தன. இதையடுத்து கேரளா வில் உள்ள விமான நிலையங்களில் சுங்க அதிகாரிகள் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி இருந்தனர். இந்த நிலையில் நேற்று துபாயில் இருந்து கொச்சி வந்த விமானத்தில் வந்திறங்கிய பயணியின் மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. 

அவர்கள் அந்த பயணியை சோதனை செய்த போது அவரது உள்ளாடை யில் ரூ.38 லட்சம் மதிப்பிலான 422 கிராம் தங்கம் மறைத்து வைக்கப் பட்டிருந்தது. அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த பயணியை யும் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
 

தலைப்புச்செய்திகள்